மணல் உள்ள ஆறு
கல்யாண்ஜி
விலை ரூ.75/-

நகர்வு

ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும்
பிடித்திருக்கிறது
அசைந்து மிதந்துவரும் பூவை
அது தங்களுக்கு என்று
நினைத்து நீந்துகிறார்கள்
அதன் திசையில்
பூவோ நகர்கிறது
நீச்சல் தெரியாது
ஆறு பார்த்து அமர்ந்திருக்கும்
சிறு பெண் நோக்கி

கலாப்ரியா கவிதைகள்
விலை ரூ.180/-

புதுக் கவிதை வரலாற்றில் மட்டுமல்ல, நவீன தமிழ் இலக்கிய வரலாற்றுப் பக்கங்களிலும் கலாப்ரியா ஒரு தவிர்க்க முடியாத அத்தியாயம். ஒரு வகையில் தீரா நதி. ஒரு வகையில் நகல் செய்ய முடியாத ஒரு வெளிச்சம். பின்தொடரமட்டுமே முடியும்.  எல்லாத் தீவிரமான படைப்புக்களும் கோருகின்ற தீவிரமான பின்தொடரல் அது.

வண்ணதாசன்

நவீன தமிழ்க்கவிதையின் ஒரு அசல் முகம் கலாப்ரியா. மிக மிக இயல்பான நிகழ்வுகளை சராசரியான எளிய மொழியில் சொல்வது மட்டுமல்ல. அதன் அந்தரங்கத்தில் அணுத்தெறிப்பான ஓர் அவலம் வெடித்துத் திறப்பதிலும் கலாப்ரியாவின் கலை நுட்பமாகிறது.

கவிஞர் சிற்பி. பாலசுப்ரமணியம்

குறுந்தொகை (கவிதை அறிமுகம்)
திருவேந்தி
விலை ரூ.75/-

‘நல்ல குறுந்தொகை’ என்று அறிஞர் பெருமக்களால் போற்றப்படும் குறுந்தொகை நானூறில், முதல் நூறு பாடல்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு இக்கால மரபிற்கேற்ப கவிநடையில் எழுதப்பட்ட நூல் இது. இதற்கு முன்பே இவ்வகை நூல்கள் வெளி வந்துள்ளன என்றாலும் இது அவற்றிலிருந்து தனித்து நிற்கிறது; தனித்தடம் பதிக்கிறது.

 

இன்னொரு முகம்
ப்ரியாராஜ்
விலை ரூ.80/-

எனக்கு முகம் தந்த முகங்கள்

ப்ரியாராஜ்

 

தூது செல்வதாரடி...
தொகுப்பு : ராதா சிவன்
விலை ரூ.30/-

மீராவின் காதல் வரலாறு
ஜெயந்தி சுரேஷ்
உறுதியாய் தந்த
மொழிகள் யாவும்
மறதியாய் நீ
சொன்னவைதானோ?
காதலைவிட கடினமானது
அதை
புரிந்து கொள்ள வைப்பது!
கடிதம் என்பது
கையெழுத்தின் வெளிப்பாடல்ல...
அது
மெய் அகத்தின் வழிபாடு!
சொல்லாத சொற்கள் மட்டுமே
சொர்க்கத்தின் தூதாகிறது.

இன்னொரு கேலிச் சித்திரம்
கல்யாண்ஜி
விலை ரூ.40/-

புத்தரைப்போல
நின்று பார்த்தேன்.
கூடவில்லை.
அமர்ந்து பார்த்தேன்.
இயலவில்லை.
சுலபம்தான் என்தீறு
புத்தரைப் போலச்
சிரிக்க முயன்றேன்.
புத்தர்தான் சிரித்துக்கொண்டிருந்தார்
என்னைப் பார்த்து இப்போதும்.

வாக்கு
ரிஷி
விலை ரூ.35/-

நிலை
குயவன் கைப்பானையை “வெறும் மட்பாண்டம்,
கெட்டு விடும்” என்று
எள்ளி நகையாடியவர்
கைக்காமராவில் அதை யொரு
படம் பிடித்துக் கொண்டு
“இனி காலத்திற்கும் நிலைக்கும்!” என்றார்.
குடிக்கத் தண்ணீர் கேட்டவரிடம்
“நக்கிக் குடியுங்கள், அல்லது உறிஞ்சிக்
கொள்ளுங்கள் -
நீங்கள் எடுத்த படத்திலிருந்து,”
என
எடுத்துக் கூறினார்கள்
குயவனும், கவிஞனும்.

மௌனத் தூதன் (ஜெர்மன் கவிதைகள் - ஓர் அறிமுகம்)
வத்ஸலா விஜயகுமார்
விலை ரூ.50/-

ஜெர்மன் கவிதைகளின் கருத்துக்களையும் கவிநயத்தையும் மட்டுமேயன்றி அவற்றின் வரிவடிவத்தையும் அப்படியே தமிழில் கொண்டுவர நான் முயன்றுள்ளேன். அதாவது நான்குவரி, ஆறுவரி என்றுள்ள "Stanza"க்களை அதே அளவான வரிகளிலேயே மொழிபெயர்த்துள்ளேன். இக்கவிதைகளைப் படிக்கும் தமிழர்களுக்கு அவை ஜெர்மன் இலக்கியத்திற்கு ஒரு சாளரமாக அமையும் என்று நம்புகிறேன். க்யோதெயின் ஒரு வாக்கியத்துடன் இம் முன்னுரையை முடித்துக் கொள்கிறேன்: "Moge das Bestreben unseres diesmaligen Berufes angenehm sein!" “நமது இம்முயற்சி இனியதாக அமைகஸ”

வத்ஸலா விஜயகுமார்

வெட்டி முறிப்பு களம்
நட. சிவகுமார்
விலை ரூ.35/-

சமூகத்தின் ரத்தமும் சதையுமாய் சூம்பிபோன ஈரங்கால் பிடித்த வால் ஓவியங்கள், விளிம்புநிலை வாழ்க்யின் நெருக்கடிகள் நட. சிவக்குமாரின் வெட்டி முறிப்பு களமாகி உள்ளது.
முதல் கவிதைத் தொகுப்பான “உவர் மண்”ணுக்குப் பிறகு பத்துவருட இடைவெளியை தாண்டி வெளிவரும் இரண்டாவது தொகுப்பு இது.

 

 

சீம்பாலில் அருந்திய நஞ்சு
ரவிசுப்ரமணியன்
விலை ரூ.50/-

ரவிசுப்ரமணியத்தின் இருப்பு புதிரானது. சராசரி வாழ்வும் கலையும் விஸ்வரூபம் எடுத்தபோது கலையின் காலடியில் வாழ்வை சமர்ப்பித்து, அதன் கிளைகளையும் சேர்த்து கைப்பற்றிய தீவிரம், அவருடைய செயல்களில் திளைத்துக் கிடக்கிறது. வாழ்வின் அல்லல்களைக் கடந்து வலிகளின் ரத்தம் வடியும் குறுவாளைக் காற்றசையா வெற்றிடத்தின் மையத்தில் செருகியிருப்பதிலிருந்து உயிர்ப்பிக்கிறது ரவியின் படைப்புகள்.

 

 

உயிர்க் காற்று
ராசி அழகப்பன்
விலை ரூ.35/-

அகம் சுவாசி
ஆழ் மனம் புசி
இலைபோல் அசை
ஈயாதே புகை
உயிர்க் காற்று
ஊரார்க்கு உரை
எளிமையாய் பற
ஏகடியும் மற
ஒன்றாய் ஆகு
ஓங்காரம் ஏகு
ஔசித்தியம் கொள்
அஃதே மனிதம்...

ரத்தம் கண்ட விளக்கு
முத்து மகரந்தன்
விலை ரூ.40/-

தண்ணி எடுக்கையில்
நனைந்து
தடுக்கி விழுந்தாலும் சரி
தரையைக் கூட்டும்
பாவாடையை
கணுக்காலுக்கு மேல்
தூக்காதே.
‘கற்பு என்னாவது பின்’

பிரபஞ்ச கானம்
இளையபாரதி
விலை ரூ.40/-

சிறகுகளோடு வந்தவனின் வானம் தொலைந்துபோயிருந்தது அவனே தன் வானத்தை வடிவமைத்தான் நிலாவையும் சூரியனையும் நட்சத்திரங்களையும் நேர்படவைத்தான் அவனைச் சுற்றி கிரகங்கள் சுழல ஆரம்பித்தன.

 

கால்-மனிதன்
வைதீஸ்வரன்
விலை ரூ.125/-

இந்த உலகம் நம்மால் அழியாமலிருக்கட்டும்

வைதீஸ்வரன்

 

 

சுயமரியாதைச் சொன்மாலையும் பெண்ணுரிமைக் கீதங்களும்
ஜீவா
விலை ரூ.25/-

“சும்மாவிருப்பதே சுகம்” என்ற திருக்கூட்டத்தைத் திரும்பிக்கூட பாராதவன் நான். 1932இல் காங்கிரஸ் சட்டமறுப்பில் ஈடுபட்டு ஓராண்டுச் சிறைவாசம் பெற்றேன். கடலூர், திருச்சி சிறைச்சாலைகளில் எனது பொழுதைச் சும்மா கழிக்க முடியவில்லை. படிப்பும் எழுத்தும் பொழுதைப் போக்கின. என் மனதை உறுத்திக்கொண்டிருந்த விஷயங்களில் ஒன்று பெண்ணடிமை. பெண்ணடிமை தேய்ந்து பெண்ணுரிமை தழைக்க வேண்டுமென்னும் ஆர்வத்தோடு சில பாட்டுகள் அக்காலங்களில் இயற்றினேன் அவற்றி தமிழுலகத்தின் முன் விநயமாக சமர்ப்பிக்கிறேன். அவசியமாயின் ஆதரிக்கட்டும்.

ஜீவா

அபத்தங்களின் சிம்பொனி
கரிகாலன்
விலை ரூ.45/-

தத்துவங்கள், உண்மைகள், தரிசனங்கள் இவற்றின் சுமையிழந்து இப்பெரும் வெளியில் ஒரு சிறகைப்போல் தம் கனவை மௌனமாக விரித்து வைப்பவை கரிகாலன் கவிதைகள். அதிகாரத்தின் சவால்களையும், விடுதலையின் சாத்தியங்களையும் உள்ளுறையாகக் கொண்டு விரிவு கொள்ளும் இவரது கவிதைகள் சொல்லுக்கு மீறிய பொருளையும், புனைவின் பரவசத்தையும் வழங்கக் கூடியவை. நவீன வாழ்வின் நெருக்கடியை, அமைப்பின் வன்முறையை, குழந்தைகள் உலகின் ஃபேண்டசியை, நனவிலி மனதின் பாலியல் சிக்கல்களை குறிப்புகளாகக் கொண்டு நிகழத் தொடங்குகிறது இந்த அபத்தங்களின் சிம்பொனி.

பெருவியாதிக்காரனின் கடவுளர்கள்
முத்துமகரந்தன்
விலை ரூ.50/-

கலாப்ரியா, விக்ரமாதித்யன் ஆகியோரிடம் ஈடுபாடு கொண்ட முத்துமகரந்தன் கவிதைகளில், கலாப்ரியாவின் கவியுலகத் தொடர்ச்சியைக் காணலாம். மரபின் தொடர்ச்சியற்றவர்களாய் நவீன கவிதையில் ஈடுபடும் இளங்கவிஞர்களுக்கு மத்தியில் இவரது கவிதைகள் மரபோடும் மண்ணோடும் வலுவான இணைப்பும், சுயமான அனுபவமும், தனித்துவமும் கொண்டிருப்பவை.

லஷ்மி மணிவண்ணன்

 

குறுவாளால் எழுதியவன்
தபசி
விலை ரூ.100/-

வாசகனை, தோழமை உணர்வுடன் அணுகுபவை தபசியின் கவிதைகள். நேரடித்தன்மையும், அங்கதச் சுவையும், அனுபவச் செழுமையும் ஒருங்கிணையப் பெற்ற இக் கவிதைகள் கூறுமுறையின் விழுமியங்களை தம்முள் பொதியப் பெற்றவை. நவீன சிந்தனையின் வெளிப்பாட்டு மையம் எளிமைக்கு எதிரானது அல்ல என்ற கருத்து இத்தொகுப்பின் மூலம் மீண்டுமொருமுறை மெய்ப்பிக்கப்படுகிறது.

 

 

காகங்கள் வந்த வெயில்
சங்கர ராமசுப்ரமணியன்
விலை ரூ.25/-

வயது 28, திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். இரண்டு வருடங்கள் பத்திரிக்கைப் பணி. தற்போது ‘மின்பிம்பங்கள்’ தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இது இவரது இரண்டாவது தொகுப்பு. கவிதைகள் தவிர கட்டுரைகளும், சிறுவர் கதைகள் சிலவும் எழுதியுள்ளார். பணி ரீதியான மொழிபெயர்ப்புகள் இவற்றில் அடக்கம்.

 

 

வனம் புகுதல்
கலாப்ரியா
விலை ரூ.30/-

“ஒரு மொழியில் ஒரு இனத்தில் ஒருமுறைதான் நிகழும் அற்புதம் கலாப்ரியா...”

விக்ரமாதித்யன்

 

 

தமிழ்க்குமரி
ச.து.சு. யோகியார்
விலை ரூ.40/-

ச.து.சு. யோகியார் அகலிகைக்காக வாதாடுகிறார். ஒரு சிறந்த வழக்கறிஞர்கூடக் குற்றக் கூண்டிலே நிற்கும் ஒரு பெண்ணுக்குப் பணம் வாங்கிக் கொண்டு அவ்வளவு அழகாக வாதாட முடியாது. எப்பொழுதோ மறைந்துபோன ஒரு அகலிகைக்காக அவர் நெஞ்சுருக வாதாடுவதை நாம் இன்றைக்கும் காண்கின்றோம். அவர் வாதாடுகின்ற ஒவ்வொரு முறையையும் பார்த்தால் அவர் எவ்வளவு தூரம் அந்தப் பாத்திரத்தின் மீது, அகலிகையின் மீது ஆர்வம் கொண்டு, ஆசைகொண்டு அவள் சார்பிலே கேட்கிறார் என்பதை நாம் உணர்கிறோம்.

கவியரசு கண்ணதாசன்